Tuesday, May 09, 2006

Are you interested in getting updates?

To learn more about the Sillalai group, please visit...

http://groups.msn.com/sillalai [MSN]
http://groups.yahoo.com/group/sillalai/ [Yahoo]

Send e-mail to sillalai@groups.msn.com or post your message directly on the message board.NOTE: All messages sent via e-mail are added to the message board.

Send e-mail to sillalai@yahoogroups.com or post your message directly on the message board.NOTE: All messages sent via e-mail are added to the message board.

If you do not wish to belong to Sillalai, you may unsubscribe by sending an email to sillalai-unsubscribe@yahoogroups.com

In yahoo group you will be able to receive daily reading reflections, and In MSN group you can will receive newsletters about Catholic activities. You can enter your email address below to Sign-up and you will get confirmation on successful Sign-up. Thank you for being part of our success journey.

கிறிஸ்தவமும் சில்லாலையும்:

கிறிஸ்துவின் அன்புமிக்க நெஞ்சங்களே, 400 ஆண்டுகால திருச்சபையின் சரித்திரத்தைக் கைக்கொண்ட சில்லையூர் மக்கள், காலத்துக்குக் காலம் பல ஆலயங்களை, பல நிலைகளில் அமைத்து, ஈற்றில் 1957ம் ஆண்டு, நவீன வசதிகளைக் கொண்ட ஆலயம் ஒன்றை அமைத்தனர். கத்தோலிக்க மக்களின் அதிகரிப்பையும், தேவைகளையும் கருத்திற் கொண்டு அந்நாள் மறைமாவட்ட ஆயர் வணக்கத்துக்குரிய எமிலியானிஸ்பிள்ளையின் அநுசரணையுடன் அந்நாள் பங்குத்தந்தை, வணக்கத்துக்குரிய பிதா லூயிஸ் டெஸ்சி அவர்களால், தற்பொழுது இருக்கும் நவீன ஆலயம் அமைத்து முடிக்கப்பட்டது. அவ் ஆலயத்தை அவர் பூர்த்தி செய்தமைக்கு, அவரின் கடின உழைப்பும், பங்குமக்களின் ஒத்துழைப்பும் காரணமாய் இருந்தது. அவ் ஆலயத்தின் அமைப்புக்கேற்ற நவின கோபுரமொன்றை வணக்கத்துக்குரிய குலாஸ் அடிகளால் திட்டமிடப்பட்டு, வணக்கத்துக்குரிய இராஐ ரட்ணம் அடிகளால் கட்டி முடிக்கப்பட்டது. 1957ம் ஆண்டு கட்டப்பட்ட இவ் ஆலயம், அதன் பொன்விழாவை 2007ம் ஆண்டு கொண்டாடவுள்ளது. அவ்விழாவைக் கொண்டாட நாம் தயாராகுவோம். அக்காலங்களில் நடைபெறும் பெருநாள் நாட்களில், அவ்விழாவை அலங்கரிக்கும் சரோலைப்பாடல்கள் அல்லது பவனிப்பாடல்கள், எங்கள் விழாக்களை அதிகமாக அலங்கரித்தது, ஆனால் காலத்தால் அதன் வேகம் குறைந்து விட்டது. எனினும் அப்பாடல்களை மங்காது பாதுகாத்தவர், மாவோலை மரியாம்பிள்ளை என்று செல்லமாக அழைக்கப்படுபவர், அப்பாடல்களை திறமையாக நெறிப்படுத்தி வைத்தார். அவர் அமரரானபின், அவருடைய புத்திரரான அருட்திரு ம. பாவிலுப்பிள்ளை அ. ம. தி. அவர்கள் அப்பாடல்களை, காலத்துக்குக் காலம் அமைத்து, புத்தக வடிவில் வெளியிட்டு, நமது இளம் செல்வங்கள் அதை நன்கு பயன்படுத்த வழிசெய்துள்ளார். அவருக்கு, நாம் அனைவரும் நன்றி சொல்ல கடமைப் பட்டுள்ளோம். அத்துடன் இப்பாடல்களில் சிலவற்றை, இற்றைக்கு 25 வருடங்களுக்கு முன் சில்லையூர் பாடகர்களால் பாடப்பட்டு, சந்தியாப்பிள்ளை ஜெயரத்தினம் அவர்களால், ஒலிநாடாவில் பதிவுசெய்யப்பட்டது. 2000ம் ஆண்டு அவரின் விடாமுயற்சியினால், திரும்பவும் மீள் வெளியிடாக இசைத்தட்டில் வெளியீடப்பட்டுள்ளது. எமது ஆலயத்தின் 50ஆவது வருட பொன்விழாவை குறிக்கும், தேவாலயம் சம்பந்தமான சில தகவல்களையும், விசேடமாக எமது கிராமத்தின் முதல் பங்குத்தந்தையான முத்திப்பேறு பெற்ற, யோசவாஸ் முனிவரின் தகவல்களையும், நமது கிராமத்தின் துறவற சபையைச் சேர்ந்த அருட் சகோதர, சகோதரிகளின் நாமம் தாங்கிய பட்டியலையும் வெளியிடுவதற்கு ஆலோசனையையும், அநுமதியையும், ஆசீயையும், திருவாளர் ம. ஞானப்பிரகாசத்துக்கு வழங்கிய, தெகிவளை பங்குத் தந்தை A. B. அந்தேனிப்பிள்ளை அடிகளாருக்கு, எம் தாழ்மையான நன்றியைத் தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.

புனித செயஸ்தியார் அரங்கு:

இரு நூற்றாண்டுகளுக்கு முன் சில்லாலையில், ஒரு புனித செபஸ்தியார் ஆலயம் இருந்ததாக வரலாறுகள் கூறுகின்றன. அந்த ஆலயத்தை ஆரம்பித்து பரிபாலித்து வந்த மக்கள் தங்கள் தொழில் வாய்ப்பின் காரணமாக, கிராமத்தை விட்டு வெளியேறினார். அதனால் அந்த ஆலயம் பரிபாலிப்பு அற்றுப் போய்விட்டது. அந்த ஆலயத்தில் இருந்த புனித செபஸ்தியார் சுரூபத்தை, கதிரைமாதா ஆலயத்துக்கு எடுத்து வந்து, அவ் ஆலயத்தில் நடந்ததுபோல் ஒன்பது நவ நாட்கள் அநுஷ்டித்து, தை மாசம் 20ம் திகதி திருச்சுரூபபவனி கிராமியப்பாடல்களுடன் நடைபெறும். கிராமத்தில் ஏற்பட்ட கொள்ளைநோய் காலத்தில் சுரூபத்தை வீதி தோறும் பவனி கொண்டு வழிபாடு நடத்தி, அதன் பலனை அடைந்தார்கள். இவ் ஆலயம் இருந்த வேப்பமரத்தின் இலைகளை, நோயின் அநுமானமாக பாவித்து, அதன் பலன்களை அடைந்தார்கள். இத்தகவல்களை அறிந்த அன்னாள் பங்குத்தந்தை வணக்கத்துக்குரிய பிரான்சிஸ் குலாஸ் அடிகளார், அந்த ஆலயத்துக்கு சமீபமாக ஒரு சிறிய சதுக்கத்தை, 1977ம் ஆண்டு மார்கழி மாதம் பதினோராம் திகதி, அப்பகுதிவாசிகளின் அனுசரணையுடன் அமைத்து, புனித செபஸ்தியார் சுரூபத்தை ஸ்தாபித்து வைத்தார். இவ்விடம் காலாதிகாலமாக, புனித செபஸ்தியார் வீதி என அழைக்கப்பட்டு வருகின்றது. ஆண்டு தோறும், புனித செபஸ்தியார் திருநாள் அன்று, இவ்வரங்கில் விசேட வழிபாடுகளை, ஆலயத்தின் பங்குக்குருக்கள் நடாத்தி வைப்பார்கள். இதனைத் தொடர்ந்து விசேட கலைநிகள்வுகளும், இடம்பெறுவது வழக்கம்.

வண. லூயிஸ் டேசியும், சில்லாலையின் கிறிஸ்தவப் பணியும்:

முத்திப் பேறுபெற்ற யோசவாஸ் முனீந்திரன், சில்லாலையின் முதலாவது பங்குத்தந்தையென்பதை நாமெல்லோரும் ஏற்றுக் கொண்டோம். அதன் பின் வந்த பங்குத்தந்தைகளில், வணக்கத்துக்குரிய லூயிஸ் டேசி அடிகளார் தனது குருத்துவப் பணியில் முக்கிய இடத்தைப் பெற்றுக் கொண்டார். அவர் இரு பருவகால குருத்துவப்பணியை 15 ஆண்டுகள் செய்து முடித்தார். இவர் தனது முதலாவது பருவகாலத்தில், இக்கிராமத்தில் பெண்பிள்ளைகளுக்கு ஓர் பாடசாலையும், ஆண்களுக்கு ஓர் பாடசாலையும், அமைத்துக் கொடுத்தார். சில்லாலை தெற்கில், புனித யாகப்பர் ஆலயமென்றை அமைத்தார். இரண்டாவது பருவகாலத்தில் இலங்கையின் பிரமாண்டமான, அழகுவாய்ந்த ஆலயங்களில் ஒன்றான கதிரைமாதா ஆலயத்தை அமைத்தார். அவர் குருவாகவும், கைத்தேர்ந்த தொழில்நுட்பவியலாளராகவும், இருந்ததினால் அவ் ஆலயம் வலுப்பெற வாய்ப்பாக இருந்தது.
நமது கிராமம் பொருளாதாரத்தில் பின் தங்கியிருந்ததினால் பல கணிசமான வேலைகளை ஊர்மக்களின் சிரமதானப்பணி மூலம் செய்து முடித்தார். 1957ம் ஆண்டு புதிய ஆலயத்தில் முதற் திவ்விய திருப்பலியை அவர் நிறைவேற்றிவைத்தார். புதிய ஆலயத்தை ஆரம்பித்து பிரசங்க மேடைக்கு வந்த பொழுது, அவருடைய பிரசங்கத்தைக் கேட்க எல்லோரும் ஆவலுடன் இருந்தனர். முதல் இறைவனுக்கு நன்றி தெரிவித்தபின், தனக்கு உறிதுணையாக இருந்த, யோன்பிள்ளை உப தேசியருக்கும் நன்றி தெரிவித்தார். பின் பாடசாலைப் பிள்ளைகளாய் இருந்த, சிறுவர்கள் செய்து கொண்ட பங்களிப்பைப் பாராட்டி, இந்த கட்டிட வேலையில் சிமெந்து, மணல்,, தண்ணீர், மட்டுமல்ல இளம் சிறார்களின் வேர்வையும் கலந்துள்ளதென கூறினார்.

யோசேவ்வாஸ் முனிவரின் சிலுவை:

வேத விதிகளை அனுசரியாத, காயர் பிறஞ்சிப்பிள்ளை, ஞாயிறு தினங்களில் திருப்பலியை அலட்சியம் செய்து, வேலை செய்துவந்தார். ஒரு ஞாயிறன்று வழமைபோல் திருப்பலிக்கு செல்லாது வீடு வேய்ந்தார். இதையறிந்த யோசவ்வாஸ் வீடு வேய்வதை விட்டுப் திருப்பலிக்கு வருமாறு கூறியனுப்பினார். காயர் செவிசாய்க்கவில்லை. அதையறிந்த முனிவர் "காயர் வீடு தீப்பற்றி எரியட்டும்" என்றார், ஆவ்வாறே வீடும் எரிந்தது. முனிவரிடம் சென்று மன்னிப்புக் கோரினார், காயர். முனிவர் தன் சிலுவையைக் கழற்றி "இச் சிலுவை உன்னிடம் உள்ளவரையும் குறையா சோறும், புத்ரிர பாக்கியமும் உண்டு" என ஆசீர்வதித்தார். இச் சிலுவை தலைமுறை, தலைமுறையாக காயர் இனத்தவரிடம் உள்ளது. தற்போது இச்சிலுவையானது மடுத்திருப்பதியில் கடமைபுரியும் திரு. A. J. மரிய நாயகம் அவர்களினது காப்பில் உள்ளது. இவர் இதனை உயிர்போலக் காத்து வருகிறார். இதனுள் இருப்பதை அறிய, இச் சிலுவையை உடைத்துப் பார்த்த குரவர் ஒருவர், குருடானதாக கர்ண பரம்பரைக் கதையுண்டு. இச் சிலுவையைப்பற்றி ஆராச்சி நடத்த வந்த பாப்பரசரின் பிரதிநிதிகள் றோமைக்கு எடுத்துச் செல்வதற்கு, இதனைத் தருமாறு கேட்டனர், அதற்கு சிலுவையின் உடைமையாளர் மறுத்துவிட்டார்.

யோசவாஸ் முனிவரும், சில்லாயும்:

ஒல்லாந்தரின் வேதகலாபனைக் காலத்தில், சில்லாலையில் வேர் ஊன்றிய திருச்சபையினர், சுயாதீனமாகத் தங்கள் வழிபாடுகளைக் குருக்களின்றிக் கடைப்பிடித்து வந்தனர். இவ்வேளையில் 1687ல், வணக்கத்துக்குரிய யோசவாஸ் அடிகள் மாறுவேடத்தில் கத்தோலிக்க சேவை புரிய, யாழ் நகர் வந்தார். வயிற்றோட்ட நோயால் பீடிக்கப்பட்ட இவர், பாதுகாப்பு இடமெனக் கருதப்பட்ட சில்லாலையில், ஒரு குடிசையில் தங்கி வாழ்ந்தார்.
இவரின் உண்மை உருவத்தை எப்படியோ தெரிந்து கொண்ட, மரியன்னையின் பத்தி விசுவாசமுள்ள, மூதாட்டி ஒருவரினால் காப்பாற்றப்பட்டார். தன் நோயிலிருந்து விடுபட்டது மரியன்னையின் அருளினால் தான், என்று கண்ட அடிகளார் "ஆரோக்கியமாதா", "மருந்துமாதா" என்று மரியன்னையை அழைத்தார். குடிசைக் கோவிலாக இருந்த அன்றைய ஆலயத்தில், அவர் கிட்டதட்ட மூன்று ஆண்டுகள் தங்கியிருந்து திருப்பலி நிறைவேற்றி வந்தார் என்பது வரலாறு கூறும் உண்மை.
1882ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட ஆலயம், தற்போதைய கத்தோலிக்க மக்களின் அதிகரிப்புக்கும், ஆராதனைகளில் பக்திபூர்வமாக மக்கள் பங்குபற்றுவதிலும் இருந்த வசதிக் குறைவுகளைக் கருத்திற் கொண்டு, யாழ் ஆயர் அதிவணக்கத்திற்குரிய எமிலியானுஸ்பிள்ளை ஆண்டகையின் அனுசரணையுடன், வணக்கத்துக்குரிய பிதா லூயிஸ் டெஸசி அடிகளாரின் விடாமுயற்சியால், இலங்கையில் உள்ள அழகு வாய்ந்த ஆலயங்களில் ஒன்றான, புதிய ஆலயத்தினை, 1960ஆம் ஆண்டு கட்டி முடித்தார். இவ்வாலயத்தின்நவீன கோபுரம் ஒன்று, வணக்கத்துக்குரிய பிதா பிரான்சிஸ் குலாஸ் அடிகளால் திட்டமிடப்பட்டு, வணக்கத்துக்குரிய பிதா இராசரட்ணம் அடிகளால் கட்டிமுடிக்கப்பட்டது. வரலாற்று ரீதியில் எமது கிராமத்தின் முதல் பங்குத்தந்தையாக, அண்மையில் புனிதராக திருநிலைப்படுத்தப்பட்ட புனித யோசவாஸ் முனிவர் திகழ்கிறார். சில்லாலை கிராமத்திலிருந்து தற்போது மலேசிய ஆயராக இருக்கும் பேரருட்திரு. அன்ரன் செல்வநாயகம் ஆண்டகை உட்பட 34 குரவர்களும், 37க்கும் மேற்பட்ட கன்னியாஸ்திரிகளும், அதிகப்படியான மறையாசிரியர்களும், கத்தோலிக்க திருச்சபையின் வளர்ச்சியில் தம்மை அர்ப்பணித்துள்ளனர். இதையிட்டு சில்லாலைக் கிராமம் பெருவகையும், இறையேசுவின் பேரருளையும் பெறுகிறது.
உலகின் பல பாகங்களிதும் பரந்து வாழும் சில்லையூர் மக்கள் ஆங்காங்கே கதிரைச் செல்வியின், இப் பெருவிழாவைக் கொண்டாடுகிறார்கள். அந்தந்த நாடுகளில் உள்ள ஊடகங்கள் கணிசமான முக்கியத்தை கொடுக்கிறது. எமது நாட்டிலுள்ள தமிழ், ஆங்கில ஏடுகளிலும், முன்னுரிமை அளிக்க தவறுவதில்லை. கொழும்பிலும், பிறநகர்பகுதிகளிலும் வாழும் பக்தர்கள், சில்லாலைக் கதரைமாதா ஆலயவிழாவில், பங்கு பற்ற முடியாதநிலையில் இருப்பவர்கள், கொழும்பு மாநகரில் உள்ள இலக்கம் 33 கிளிபேட் பிளேஸ், பம்பலப்பிட்டியில் அமைந்துள்ள யேசுசபைக் சிற்றாலயத்தில், இவ்விழாவை கொண்டாடுகின்றார்கள். பல குருமார் இணைந்து, இங்கு கூட்டுத் திருப்பலியும், திருச்சுரூப ஆசிர்வாதமும் இடம்பெறும்.
ஆசாரத்துக்குரிய முத்திப்பேறுபெற்ற யோசவாஸ் முனிவர் கிறிஸ்துவின் நற்செய்தியை இலங்கையில் போதிக்கவந்த காலத்தில், திருச்சபைக்கு மாறாக, ஒல்லாந்து அரசியல் வாதிகளால், ஏற்பட்ட கஸ்ரங்களில் இருந்து தப்பித்துக் கொள்ளுவதற்கு, ஆதி கிறிஸ்தவர்கள் பலமான வேத விசுவாசத்தில் ஊன்றிய மக்கள் மத்தியில் தஞ்சமடைந்து கொண்டார். அவர்களிடம் தஞ்சமடைந்தபின் ஒல்லாந்தரின் நெருக்கடியில் இருந்து குரவரை பாதுகாப்பதில் ஒவ்வொரு கிறிஸ்தவர்களும் கண்காணிப்புடன் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் சில்லாலை கத்தோலிக்க மக்களின் விசுவாசத்தை பாராட்டி, கொழும்பு மறைமாவட்ட பேராயர் நிக்கலஸ் மாக்கஸ் பெர்ணாண்டோ, ஆசாரத்துக்குரிய யோசவ்வாஸ் முனிவர், யாழ் மறைமாவட்ட ஆயர் வ. தியோகுப்பிள்ளை, திருகோணமலை, மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் கிங்சிலி சுவாம்பிள்ளை, கண்டி மறைமாவட்ட ஆயர் வியன்னி பெர்னான்டோ "இலங்கை கத்தோலிக்க ஆயர் மண்றத்தலைவர்", சிலாபம் மறைமாவட்ட ஆயர் F. மாக்கஸ் பெணாண்டோ, முன்னாள் சிலாபம் மறைமாவட்ட ஆயர் எட்மன்ட் பீரிஸ், திருகோணமலை, மட்டக்களப்பு மறைமாவட்ட முன்னாள் ஆயர் L. R. அன்ரனி, இளவாலை மறைவட்டார முதல்வர் அருட்தந்தை அன்ரன் T. இராரஐநாயகம், யாழ் மறைமாவட்ட குழுத்தலைவர் எஸ். ஹிலறி ஜெபநேசன். பங்குத்தந்தை ப. இருதயதாஸ் ஆகியோர் தங்கள் உள்ளக் கருத்துக்களை பகிரங்கமாக அறிக்கையிட்டு, ஆதிக் கத்தோலிக்க குருக்கள் வழங்கிய சின்னறோம் எனும் நாமத்தை உறுதிப்படுத்தினார்கள்.

சின்னறோமும் மரியன்னையின் விழாவும்:

ஆவணி 15ம் திகதி, மரியன்னை விண்ணகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட மாட்சிமையை நினைவு கூறும் நன்னாள். அகில உலக கத்தோலிக்க சமுதாயம், அன்னையின் மாண்பை, மனத்திருப்தி மகிழ்வுடன், விழா எடுத்து நன்றி செலுத்துகிறது. மரியன்னையின் திரு விழாக்களிலே சிறப்பு வாய்ந்ததும், அர்த்தம் பொதிந்ததும், மரியன்னையின் விண்ணேற்பு விழாவே யாகும். இறைவனின் திட்டத்திற்கு தன்னை அர்ப்பணித்துக் கீழ்ப்படிந்தமையால், விண்ணக மகிமை அடைந்தாள், மரியன்னை. இறைவன் உலகுக்குத் தந்த தாயை திருநூலில் பல தடவை எடுத்தியம்பியுள்ளமை, மரியன்னையின் தாழ்மையையும், கீழ்ப்படிதலையும் தெளிவுபடுத்துகிறது.
மரியன்னையின் விண்ணக மகிமையை, தாய்ச்திருச்சபை மங்களகரமாக, புகழ்ந்தேற்றும் இந்த நன்னாளில், சில்லையூர் மக்களும் தம் பாதுகாவலியாம், கதிரைத்தாய்க்கு விழா எடுப்பது பெருமைக்குரியதாகும். ஏறக்குறைய 400 ஆண்டுகளாக கத்தோலிக்க பாரம்பரியத்தை, தன்னகத்தே கொண்ட சில்லையூர் தம்பாதுகாவிலியை, "கதிரைச் செல்வி", "ஆரோக்கியமாதா", "மருந்துமாதா", "தஸ்நோவின்மாதா" என இதய வாஞ்சையுடன், அழைத்து மகிழ்கின்றனர். கதிரையில் அமர்ந்து அன்புக்கரம் தந்து கருணை மழைபொழியும், கதிரைத்தாய்க்கு இடம் பெயர்ந்து வாழும் இடங்களில், கூட விழா எடுப்பது சில்லையூர் மக்கள் அன்னையின் பற்கொண்ட, பிள்ளைப் பாசத்தை எடுத்துக்காட்டுகிறது.
1544ஆம் ஆண்டில், போர்த்துக்கேயர் யாழ்ப்பாணம் வந்து, கத்தோலிக்க மதத்தைப் போதித்தனர். ஆங்காங்கே பல கற்தேவாலயம்களைக் கட்டினர். பண்டத்தரிப்பில், இன்று அமெரிக்கன் மிஷன் தேவாலயம் இருக்குமிடத்தில், ஆரோக்கியமாதாவுக்கென ஒரு தேவாலயம் அமைக்கப்பட்டிருந்தது. அத்தேவாலயத்தில் போர்த்துக்கேயரால், அதி அற்புதவிதமாய் பூஜிக்கப்பட்ட, ஆரோக்கிய மாதாவின் சுரூபம் இருந்தது. இச் சுரூபம் கதிரையில் இருந்து திவ்விய பாலனை மடியில் வைத்து, அரவனைக்கும் பாவனையாய் காணப்பட்டதால், கதிரை மாதாவென நாமம் பெற்றது. போர்த்துக்கேயரின் வசமிருந்த நாடு, ஒல்லாந்தரின் கைக்கு மாறியவுடன், இச்சுரூபத்தை ஒல்லாந்தர் அநாசாரஞ் செய்யாதபடி, சில்லாலைக் கிறிஸ்தவர்கள் ஒன்று சேர்ந்து, எவரும் காணாமல், இரவில் எடுத்து வந்து சில்லாலையில் மண்ணால் கட்டப்பட்ட தேவாலயத்தில் வைத்தார்கள். ஒல்லாந்தரின் வேதகலாபனைக் காலத்தில், காலத்துக்குக் காலம் இடம் மாற்றிக் கிணறுகளிலும், சந்து பொந்துகளிலும், மறைத்து வைத்து, தம் கண்ணிமை போல் காத்து வந்தனர். எம் மூதாதையர்களால் காப்பாற்றப்பட்டு வந்த, அதே கதிரை மாதாவின் சுரூபமே, இன்னும் சில்லாலைத் தேவாலயத்தில் அமைந்துள்ளது என்பது அற்புதமானது.

சில்லாலைப்பங்கு உருவாக்கிய மறைத் தொண்டர்கள்:

திரு. சவுந்திரநாயகம் சுவாம்பிள்ளை
திரு. அந்தோனிப்பிளஇளை சுவாம்பிளை
திரு. ஆரோக்கியநாதர் சவரிமுத்து
திரு. யேசுதாசன் மடுத்தீனுப்பிள்ளை
திரு. யேசுதாசன் மரியாம்பிள்ளை

சில்லாலைப்பங்கு உருவாக்கிய அருட்செல்வியர்:

திருக்குடும்ப கன்னியர்: அருட் சகோதரி. சிசில்
திருக்குடும்ப கன்னியர்: அருட் சகோதரி. செலஸ்ரின்
திருக்குடும்ப கன்னியர்: அருட் சகோதரி. திரோஸ்
திருக்குடும்ப கன்னியர்: அருட் சகோதரி. ஸ்ரனிஸ்லோஸ்
திருக்குடும்ப கன்னியர்: அருட் சகோதரி. டோமினிக்
திருக்குடும்ப கன்னியர்: அருட் சகோதரி. சென்டோனா
திருக்குடும்ப கன்னியர்: அருட் சகோதரி. மாகிறெற் மேரி
திருக்குடும்ப கன்னியர்: அருட் சகோதரி. கிறிஸ்ரின்
திருக்குடும்ப கன்னியர்: அருட் சகோதரி. ஆன்மேரி
திருக்குடும்ப கன்னியர்: அருட் சகோதரி. லூயிசா
திருக்குடும்ப கன்னியர்: அருட் சகோதரி. குளோட்டில்டா
திருக்குடும்ப கன்னியர்: அருட் சகோதரி. விசிற்நேசன்
திருக்குடும்ப கன்னியர்: அருட் சகோதரி. லூசியா
திருக்குடும்ப கன்னியர்: அருட் சகோதரி. லியோணி
திருக்குடும்ப கன்னியர்: அருட் சகோதரி. மொணிக்கா
திருக்குடும்ப கன்னியர்: அருட் சகோதரி. றோஸ் ஒவ்லீமா
திருக்குடும்ப கன்னியர்: அருட் சகோதரி. அக்னேஸ்
திருக்குடும்ப கன்னியர்: அருட் சகோதரி. இமல்டா
திருக்குடும்ப கன்னியர்: அருட் சகோதரி. பசில்
திருக்குடும்ப கன்னியர்: அருட் சகோதரி. வேபியன்
திருக்குடும்ப கன்னியர்: அருட் சகோதரி. அக்னேசியா
திருக்குடும்ப கன்னியர்: அருட் சகோதரி. பெற்றனிலா
திருக்குடும்ப கன்னியர்: அருட் சகோதரி. சில்வேஸ்ரர்
திருக்குடும்ப கன்னியர்: அருட் சகோதரி. லோறா
திருக்குடும்ப கன்னியர்: அருட் சகோதரி. பெனடிற்றா
திருக்குடும்ப கன்னியர்: அருட் சகோதரி. நிசற்றா
திருக்குடும்ப கன்னியர்: அருட் சகோதரி. கிறிஸ்ரியானா
திருக்குடும்ப கன்னியர்: அருட் சகோதரி. றெமியூல்ட்
திருக்குடும்ப கன்னியர்: அருட் சகோதரி. நவத்திரேஸ்
திருக்குடும்ப கன்னியர்: அருட் சகோதரி. மல்லிகா
திருக்குடும்ப கன்னியர்: அருட் சகோதரி. டொறின்
திருக்குடும்ப கன்னியர்: அருட் சகோதரி. கதிருரரின் விஐயா
கார்மேல் சபை: அருட் சகோதரி. ஸ்ரனிஸ்லாஸ்
கார்மேல் சபை: அருட் சகோதரி. மாகிறேற்
கார்மேல் சபை: அருட் சகோதரி. சன்னா
கார்மேல் சபை: அருட் சகோதரி. லோஜி அணுஜா
திருச்சிலுவைக் கன்னியர்: அருட் சகோதரி. றீற்றா
திருச்சிலுவைக் கன்னியர்: அருட் சகோதரி. ஜெம்மா
செபமாலைத்தாசர் சபை: அருட் சகோதரி. யோசவ்லின்
செபமாலைத்தாசர் சபை: அருட் சகோதரி. ஜேட்நூட்
செபமாலைத்தாசர் சபை: அருட் சகோதரி. கிளாறா
செபமாலைத்தாசர் சபை: அருட் சகோதரி. பிறிச்சிற்

சில்லாலைப்பங்கு உருவாக்கிய குருக்கள்:

அருட் தந்தை. பிரான்சிஸ் பாவிலுப்பிள்ளை
அருட் தந்தை. ஆபிரகாம்
அருட் தந்தை. யோசவ் நீக்கிலாப்பிள்ளை
அருட் தந்தை. சிங்கராயர் சூசைப்பிள்ளை
அருட் தந்தை. சுவாம்பிள்ளை அந்தோனிப்பிள்ளை
அருட் தந்தை. யோசவ் சுவாம்பிள்ளை
அருட் தந்தை. அருள்நேசன் சுவாம்பிள்ளை
அருட் தந்தை. பாவிலுப்பிள்ளை மரியாம்பிள்ளை
அருட் தந்தை. சிங்கராயர் யோன்பிள்ளை
அருட் தந்தை. ரட்னபாலா கனியூட் நற்குணம்
அதி வந்தனைக்குரிய மேற்ராணியார் செல்வநாயகம் ஞானப்பிரகாசம்
அருட் தந்தை. சேவியர் லோறண்ஸ்
அருட் தந்தை. வுளோறிமென்ட் சவரிமுத்து
அருட் தந்தை. பீற்றர் பொன்கலன் சவரிமுத்து
அருட் தந்தை. ஏபிரகாம் அந்தோனிப்பிள்ளை
அருட் தந்தை. கிறிஸ்தோப்பர் அந்திரேஸ்பிள்ளை
அருட் தந்தை. அருளானந்தம் அந்தோனிப்பிள்ளை
அருட் தந்தை. மேரி லூயிஸ் மொண்பேட் யோசப் மரியநாயகம்
அருட் தந்தை. குனேந்திரன் இம்மானுவேல்
அருட் தந்தை. பீற்றர் நீக்கிலாப்பிள்ளை
அருட் தந்தை. றொபேட் கிங்கிலி தேவமணி
அருட் தந்தை. சயாஙநாசன் அந்திரேஸ்பிள்ளை
அருட் தந்தை. றூபன் மரியாம்பிள்ளை
அருட் தந்தை. ரஞ்சன் சாமிநாதர்
அருட் தந்தை. றொஷ டோமினிக்
அருட் தந்தை. போல் றொஷான் மேரிஜோசப்
அருட் தந்தை. அமிர்த நாதர்
அருட் தந்தை. டண்ஸ்ரன் செல்வரட்னம்
அருட் தந்தை. றெனோட் ஜோர்ச்
அருட் தந்தை. எமில்
அருட் தந்தை. யூட் வில்சன்
அருட் தந்தை. யஸ்ரின் செளகான்
அருட் தந்தை. யோத்நாதன் யோண்பிள்ளை